Thursday 25 June, 2009

பயணக் கட்டுரை 01

தெய்வ தரிசனம் 01
இது என் முதல் முயற்சி. நீங்கள் எல்லோஒரும் உடனே இதுவே கடைசி முயற்சியாகவும் ஆகுக என கூறுவீர்கள் அல்லது கூவுவீர்கள் என்று நினைக்கின்றேன்! நான் விடுவதாக இல்லை; யாரும் தப்பிக்க முடியாது - விதி வலியது.

என் முதல் வணக்கம் - விநாயகருக்கு!

நம்முடைய இந்தப் பதிவில் என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி தற்போ தைக்கு திட்டங்கள் எதுவும் இல்லை. அப்படியே இருந்துவிடவும் முடியாது. கேள்விகள் கேட்க நினைப்பவர்கள் - அனுப்பலாம். இல்லையேல் நானே கேட்டு நானே பதில் எழுத வேண்டும்- அதை நானே படித்து நானே இரசித்து - நானே சிரித்து.. .. தேவைதானா இந்த நிலை?

சமீபத்தில் நாங்கள் (kgg & brothers - தியாகு, KGY, KGV) விசிட் செய்தது - வல்லக்கோட்டை & ஸ்கந்தாஸ்ரமம். வல்லக்கோட்டை தாம்பரத்திற்கு தென் மேற்கில் அல்லது கிழ மேற்கில் அல்லது தென் வடக்கில் அல்லது கதம்பமாக இந்த எல்லா திசைகளிலும் சேர்ந்து 28 KM தூரத்தில் அமைந்துள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம் . அது சரிதானா இல்லையா என்பதை நீங்கள் அனைவரும் ஒரு முறை சோ தனை செய்து தெரிந்து கொள் வது நல்லது. வல்லக்கோட்டை கோ யில்1200 வருடங்கள் பழமையானது. அங்கு உள்ள ஒருவர், அந்த கோ யில் மூலவர் விக்கிரகமும், திருப்பதி மூலவர் விக்கிரகமும் - ஒரே ஸ்தபதியால் ஒரே கால கட்டத்தில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் என்று கூறினார். திருப்பதி கோ யில் வரலாறு எனக்கு தெரியாது என்பதால், இது பற்றி பிறகு சிந்திக்கலாம் என்று நான் நினைத்தேன். மற்றவர்கள் என்ன நினைத்துக் கொ ண்டிருந்தார்களோ - அல்லது பசி மயக்கத்தில் கவனிக்காமல் விட்டார்களோ - அல்லது பசி (அவர்கள்) காதை அடைத்து விட்டதோ - எனக்கு தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும், நான் ஒவ்வொ ரு முறையும் ஒரு வேண்டுதலுடன் வல்லக்கோட்டை செல்வேன். அந்த வேண்டுதல்ஓர் ஆண்டுக்குள் நிறைவேறி விடுகின்றது. (நடை பயணமும் உண்டு; கார் பயணமும் உண்டு)

தயவு செய்து - இந்த கோ யில் குளத்தில் குளிக்கின்ற ரிஸ்க் மட்டும் வேண்டாம் - நான் உங்களை மன்றாடி கேட்டுக் கொ ள்கிறேன். இந்த கோ யிலின் அருள் பிரசாதங்களில், KGV க்கு பிடித்த - தட்டை என்கின்ற - மி ளகு வடை என்கின்ற ஒரு சமாச்சாரத்தை மட்டும் வேண்டிய வரையில் வாங்கிக் கொ ண்Î கிளம்பினோ ம்.

வல்லக்கோட்டை கோயில் எவ்வளவுக்கெவ்வளவு பழமையானதோ - அவ்வளவுககவ்வளவவு புதியது - ஸ்கந்தாஸ்ரமம் கோ யில்கள் - ஆம் - ஒரு காம்பவுண்டுக்குள் - பல சாமி (சிலை)கள் - சமீப கால படைப்புகள் - கடவுள் மனிதனைப் படைத்தானோ இல்லையோ - மனிதர்கள் கடவுளை இங்கு அழகழகாகப் படைத்திருக்கிறார்கள்.


ஸ்கந்தாஸ்ரமம் - நேரில் சென்று பார்க்க விரும்புபவர்கள் - தாம்பரம் கேட் அல்லது சுரங்க வழியாக சேலையூர்போ ய், காம்ப் ரோ ட் நுழைந்து பிறகு இடம் திரும்பி - பிறகு வலம் திரும்பி - வழி காட்டி பலகைகளையோ - ஆட்டோ ஓட்டுனர்களையோ நம்பி - நிச்சயம் சென்று வரலாம் - நாங்கள் உத்தரவாதம்.

த. சத்ய நாராயணன் - அயன்புரம் தவிர்த்து - மற்றவர்களின் கருத்துக்கள் - வரவேற்கப் படுகின்றன.

அன்புடன் KGG

1 comment:

R.Gopi said...

//த. சத்ய நாராயணன் - அயன்புரம் தவிர்த்து - மற்றவர்களின் கருத்துக்கள் - வரவேற்கப் படுகின்றன.

அன்புடன் KGG //

********

Gautaman Sir

சூப்பர் கமெண்ட் vachchu இந்த katturaiyai mudichchu இருக்கீங்க.......

I still remember how Writer Sujatha wisely inserted him as a character in the movie ANNIYAN.